வகுப்பறையில் பாடத்தில் மனம் செல்லாத பொழுது கிறுக்கியவற்றில் மற்றொன்று …
———————————————————————————————————–
காலத்தின் ஓட்டத்தோடு,
எல்லைகள் மாறக் கண்டேன்.
நேரம் அது செல்ல செல்ல,
இலக்கணங்கள் மழுவக் கண்டேன்.
நாட்கள் மெல்ல நகர,
நிஜத்தை ஏற்று நின்றேன்.
மாற்றத்தின் மாற்றத்தில்,
உறவுகளைத் தாங்கிக் கொண்டேன்.
இனிமையின் வடிவம் மாற,
மகிழ்ச்சியின் வண்ணம் கலங்க,
ஆணிவேர் அது ஆழ்ந்து நிற்க,
பயணத்தை இனிதே தொடர்ந்தேன்!!!